ஓபிஎஸ், சசிகலாவை கட்சியில் இருந்து நாங்கள் நீக்கவில்லை… நீக்கியது யார் தெரியுமா..தெளிவு படுத்திய ஜெயகுமார்

சென்னை ;
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும், அதில் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ்க்கு இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பட்டினமப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “பாஜகவை பொறுத்தவரை ஒரு தேசியக் கட்சி மற்றும் ஒரு தோழமைக் கட்சி. அதுமட்டுமின்றி அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்.
அந்தக் கூட்டணியில் எந்த நிலையிலும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கு இடம் இல்லை.நாமக்கல் மற்றும் சீர்காழி கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் இது தொடர்பாக தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ஒ.பி.எஸ் மற்றும் சசிகலாவையோ கட்சியில் இருந்து நாங்கள் நீக்கவில்லை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நீக்கினார்கள். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைய வாய்ப்பே இல்லை அதற்கு அதிமுக பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது இதுவரை பிரதமர் மோடியோ அமித்ஷாவோ இருவரும் ஒன்று சேர்வது தொடர்பாக பேசியது இல்லை, இனிமேலும் அப்படி நடக்காது” என்று தெரிவித்தார்.