கோப்பில் முதல் கையெழுத்து போடும் போது நல்ல நேரம் பார்த்த உதயநிதி… வைரலாகும் போட்டோ …

சென்னை;
சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும் மற்றும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி தற்பொழுது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக டிசம்பர் 14 இன்று சுபமுகூர்த்த நாளில் நல்ல நேரமான காலை 9.30 மணி அளவில் பதவி ஏற்று கொண்டார்.
இந்த நிலையில் இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்ற பின் முதல் கையெழுத்தாக விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை 3 ஆயிரத்தில் இருந்த 6000 ஆக உயர்த்தி அறிவிக்கும் கோப்பில் தற்பொழுது கையெழுத்து இட்டு இருக்கிறார்.
இதுவே இவர் அமைச்சரான பிறகு போடும் முதல் கையெழுத்து, அப்பொழுது முதல் கையெழுத்து போடும் பொழுது உதயநிதி தன்னுடைய கைக்கடிகாரத்தில் நல்ல நேரத்தை பார்த்த பின் கையெழுத்து போட்டார்.
குறிப்பாக பகுத்தறிவு பேசும் தி.மு.கவில் அமைச்சராக பதவி ஏற்றதும் முதல் கோப்பில் கையெழுத்திடுவதற்கு மட்டும் நல்ல நேரம் பார்ப்பது தமாஸாக இருப்பதாகவும் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.