மின்தடையால் பாதியில் நின்ற ரோப்கார் … அந்தரத்தில் சிக்கிய தமிழக அமைச்சர் …. பரபரப்பு ..

சென்னை:,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.
மலைக்கோவிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனி முருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ரோப்கார் வழியாக அமைச்சர் கீழே இறங்கினார். முன்னதாக மலைக் கோவிலுக்கு மேலே செல்வதற்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் புறப்பட்டார்.
அப்போது அங்கு திடீரென மின்சார தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அமைச்சர் பிடிஆர் சென்ற ரோப்கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மின் தடை காரணமாக அந்தரத்தில் தொங்கிய பழனி ரோப்காரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளும் சிக்கிக் கொண்டனர்.
சுமார் இரண்டு நிமிடங்கள் ரோப்கார் நடுவழியிலேயே நின்ற நிலையில், மின் இணைப்பு கிடைத்தவுடன் ரோப் கார் மீண்டும் இயக்கப்பட்டது. அமைச்சர் சென்ற ரோப்கார் அந்தரத்தில் தொங்கியபடி நின்றதை பார்த்த அதிகாரிகள் சிறிது நேரம் பதற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர் .
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனை லிஃப்டில் சிக்கி மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .