ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் முன்னாள் மத்திய மந்திரி செய்த செயலால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ ….

சண்டிகர்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது அரியானாவில் இந்த யாத்திரை நடந்து வருகிறது.
ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை 100-வது நாளை எட்டியது. இதனை தொடர்ந்து இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்கி நடந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரியான பன்வார் ஜிதேந்திரா சிங் என்பவர் ராகுல் காந்தியின் ஷூ கயிறு கழன்று இருப்பது பற்றி கவனித்து உள்ளார். உடனே, முன்னே சென்று அவிழ்ந்து கிடந்த ராகுல் காந்தியின் ஷூ கயிற்றை கட்டி விட்டார்.
ராகுல் காந்தியும் அவரது முதுகில் தட்டி கொடுத்துள்ளார். எனினும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.