போலீசில் புகார் கொடுத்த ஆத்திரத்தில் இளம்பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசிய ரௌடிகள்… 2 பேர் கைது

மதுரை ;
மதிச்சியம் பகுதியில் இளம் பெண் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர் மதிச்சியம் ஆழ்வார்புரம் பகுதியில் திவ்யா என்ற இளம்பெண் வசிக்கக்கூடிய வீட்டில் திடீரென இன்று காலை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த திவ்யா, இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புகார் அளித்த திவ்யா வீட்டு மீது பெட்ரோல் குண்டு வீசியது அந்த பகுதியை சேர்ந்த 2 ரௌடிகள் என தெரிய வந்தது .
இந்நிலையில் இந்த பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மதுரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(19) சோனைமுத்து(19) ஆகிய இருவரையும் மதிச்சயம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.