பணிகள் முடியாமலேயே சுங்கம் வசூலா. சுங்கசாவடி ஊழியரை வெளுத்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ… பரபரப்பு வீடியோ…

பணிகள் முடியாமலேயே சுங்கம் வசூலா.  சுங்கசாவடி ஊழியரை வெளுத்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ…  பரபரப்பு வீடியோ…

ஐதராபாத்,

தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த பெல்லம்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. துர்கம் சின்னையா.

இவர் மஞ்சேரியல் மாவட்டத்தின் மண்டமரி சுங்க சாவடி வழியே கடந்து செல்லும்போது, அவரது காரை ஊழியர்கள் வழக்கம்போல் நிறுத்தி சுங்கம் கேட்டுள்ளனர் . இதில், காரை விட்டு கீழே இறங்கிய எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுங்க சாவடி பணியாளர்களை நெருங்கி இன்னும் சுங்கசாவடி பணிகள் முடியாமல் ஏன் சுங்கம் வசூலிக்கிறீர்கள் என்று வினவினார்கள்.

அனால் எந்த பதிலும் சொல்லாமல் ஊழியர் அமைதியாக நின்றிருந்தார் . இந்நிலையில் திடீரென தன்னை நெருங்கிய பணியாளர் ஒருவரை எம்.எல்.ஏ துர்கம் ஒரு அறை விட்டுள்ளார் . மேலும் அடிக்க பாய்ந்துள்ளார் இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் தடுத்து, சமரசப்படுத்தி அழைத்து சென்றனர்.

அதன்பின்பு, அவர் காரில் ஏறாமல் அந்த வழியே நடந்து சென்று சுங்க சாவடியின் இணை பாதையில் வந்த சரக்கு வேன் ஒன்றை, கையசைத்து முன்னே செல்லும்படி கூறினார். அந்த வேன் சென்ற பின்னர், தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்து வைரலாகி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்படாமல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் தான் சுங்கம் வசூலித்த ஊழியரை எம்.எல்.ஏ அடிக்க பாய்ந்தார் என கூறப்படுகிறது.

Leave a Reply