கலெக்டர் ஆபீஸ் முதல் தளத்தில் 15 நிமிடம் லிப்டில் சிக்கிய தமிழக அமைச்சர்.. அதிகாரிகள் அதிர்ச்சி ..

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தரை தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு லிப்டின் மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று லிப்டின் இயக்கம் தடைபட்டது. இதனால் உடன் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் .
உடனே தகவல் அறிந்து வந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அமைச்சர் சிவசங்கரை லிப்டில் இருந்து பத்திரமாக மீட்டனர்.
இதன் காரணமாக அமைச்சர் சிவசங்கர் 15 நிமிடங்கள் லிப்டில் மாட்டிக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது . லிப்டில் அமைச்சர் சிவசங்கர் சிக்கிக்கொண்ட சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.