குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 வழங்கும் திட்டம் – ஆளுநர் ஒப்புதல்…

அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மந்திரி கூறியுள்ளார்.
ரூ 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி தேனீ ஜெயக்குமார் கூறியுள்ளார்.
புதுவை மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படும்.