எங்கள் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் போய்விடுங்கள் …. கம்யூ. எம்.பி.யை திருப்பி அனுப்பிய வீரர், வீராங்கனைகள்..

எங்கள் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் போய்விடுங்கள் …. கம்யூ. எம்.பி.யை  திருப்பி அனுப்பிய வீரர், வீராங்கனைகள்..

டெல்லி: 

இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி மல்யுத்த வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

இந்நிலையில், வீரங்கனைகளின் புகார் குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மல்யுத்த கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “இந்த விவகாரம் விளையாட்டு வீரர்களின் நலன் சார்ந்தது என்பதால், அமைச்சகம் இதனை தீவிரமான ஒன்றாகப் பார்க்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக 72 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். தவறினால், தேசிய விளையாட்டுத்துறை விதி 2011ன் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. பிருந்தா காரத்தை தடுத்து நிறுத்திய வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என கைகூப்பி திருப்பி அனுப்பினர்.

.

Leave a Reply