எச்ச கையில காக்கா கூட ஓட்டாத ஆளு ஓபிஎஸ் … தாக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் ..

எச்ச கையில காக்கா கூட ஓட்டாத ஆளு ஓபிஎஸ் … தாக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் ..

நாகப்பட்டினம் ;

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கழக நிறுவனத் தலைவரும், பாரத ரத்னாவுமான எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு பொது கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டி கடைவீதியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ் மணியன் கலந்து கொண்டு எம்ஜிஆர் கொண்டு வந்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.

அவர் பேசும்போது ;

அதிமுகவில் 4 அணி என்பதெல்லாம் இல்லை எனவும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆளாக செயல்படுவதாகவும் கம்பெனிக்கு கூட ஆகமாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

அதிமுகவில் மொத்தம் 2,642 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளதாகவும், ஓபிஎஸ் அணியில் எண்ணிப் பார்த்தால் நூறு பொதுக்குழு உறுப்பினர்கள் கூட இருக்கமாட்டார்கள் எனவும் 99.5% பேர் எடப்பாடி அணியில் உள்ளதாகவும் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

மேலும் வெட்டிய கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர்’,’எச்சில் கையில் காக்கை விரட்டமாட்டார்’ என்பன போன்ற பழமொழிக்கு பொருத்தமானவர் ஓ. பன்னீர்செல்வம் என்றும் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டினார்

Leave a Reply