வரி பாக்கி வைத்துள்ள  ’டாப் 100’ பேர் .. பட்டியல் வெளியிட தயாராகும்  கோவை மாநகராட்சி…

வரி பாக்கி வைத்துள்ள  ’டாப் 100’ பேர் .. பட்டியல் வெளியிட தயாராகும்  கோவை மாநகராட்சி…

கோவை ;

கோவை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி என பல்வேறு வரிகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 100 வார்டுகள் இருக்கின்றன. அதில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 611 சொத்து வரிதாரர்கள் இருக்கின்றனர்.

நடப்பு 2022 – 23ஆம் நிதியாண்டு வரும் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் சொத்து வரியாக 344 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 197 கோடி ரூபாய் மட்டும் வசூலாகியுள்ளது.

எனவே வரிதாரர்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று வசூலில் ஈடுபட மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் வரி செலுத்துவதில் அலட்சியப் போக்கு காணப்படுகிறது. சொத்து வரி தவிர தொழில் வரி, குடிநீர் கட்டணம் என கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் உள்ளது.  

இதுதொடர்பாக முக்கிய இடங்களில் அறிவிப்புகள் வாயிலாக விழிப்புணர்வும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. வரி செலுத்தாத நபர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அதிக தொகை செலுத்தாத முதல் 100 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரி செலுத்தாத நபர்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைசியில் சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம். மாநகராட்சியில் வரியினங்கள் செலுத்தாத ‘டாப் 100’ பேரின் பட்டியல் தயாராகி வருகிறது.

பலரும் வரி செலுத்த ஆரம்பித்து விட்டனர்.எனவே வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்தி மாநகராட்சியின் நடவடிக்கைகளை தவிர்க்கலாம் என்று மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply