பாகிஸ்தானை விட்டு தப்பியோடிய சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப் மரணம்….

பாகிஸ்தானை விட்டு தப்பியோடிய சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப் மரணம்….

துபாய் :

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் (வயது 79) உடல்நலக் குறைவால் காலமானார்.

 1943-ம் ஆண்டு டெல்லியில் ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி பிறந்தவர் பர்வேஸ் முஷாரப் .1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பர்வேஸ் முஷாரப் குடும்பம் இடம் பெயர்ந்தது.

 1964-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்து அதன் தளபதியாகவும் உயர்ந்தார். 1998-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவி வகித்தார். அப்போது பொருளாதார நெருக்கடி, காஷ்மீர் விவகாரம் என பல்வேறு நெருக்கடிகளில் நவாஸ் ஷெரீப் சிக்கித் தவித்தார்.

அந்த சூழலில் பர்வேஸ் முஷாரப்பை ராணுவ தளபதி பதவியில் இருந்து நீக்க நவாஸ் ஷெரீப் முயற்சித்தார். ஆனால் முஷாரப்போ, நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார்.

பின்னர் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக, புதிய அதிபரானார் முஷாரப். 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

அதில் முஷாரப் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் தமது பதவியை ராஜினமா செய்துவிட்டு பாகிஸ்தானை விட்டே தப்பி ஓடினார் முஷாரப். 2019-ம் ஆண்டு முஷாரப்புக்கு தேசதுரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் முஷாரப் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று முஷாரப் காலமானார். இந்தியாவுடனான கார்கில் யுத்தத்துக்கு காரணமானவர் முசாரப்.

Leave a Reply