தொண்டர்கள் தயங்கினாலும் பரவாயில்லை எனது நீண்ட நாள் ஆசை இது தான்… அண்ணாமலை பேச்சு…

தொண்டர்கள் தயங்கினாலும் பரவாயில்லை எனது  நீண்ட நாள் ஆசை இது தான்… அண்ணாமலை பேச்சு…

சென்னை;

வருங்கால அரசியல் தலைவர்களை உருவாக்கும் பயிற்சி திட்டமான ‘தலைவா திட்டம்’நிகழ்ச்சியில்  தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

“பாஜக தொண்டர்கள் சித்தாந்தங்களை பின்பற்றி, மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும். நான் எதிர்மறை சித்தாந்தம் கொண்ட தலைவர்களுடன் பழக ஆசைப்படுகிறேன்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.  எதிர்த்தரப்பு கொள்கை உடையவர்களுடன் பழகும்போது நமது மனம் திறக்கும்.

நான் அத்தகையோருடன் பழகியிருக்கிறேன்.  அந்த தருணங்களில் எனக்குள் ஒரு கண் திறந்தது. யார் யாருடனெல்லாம் பழகி பேச வேண்டும் என்று மிகப் பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். அதில் ஒருவர் தான் கி.வீரமணி. 

நான் பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்திக்க விரும்புவதாக கட்சிக்காரர்களிடம் கூறினேன். அதை கேட்டதும் கட்சிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

பா.ஜனதா தலைவர் கம்யூனிஸ்டு தலைவரை சந்திக்கலாமா என்று தயங்கினார்கள். ஆனால் நான் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.” என்று கூறினார். 

Leave a Reply