அவர் ஒரு பச்சோந்தி.. பல கட்சி தாவியவர் …திமுக குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசியவர் … திமுக அமைச்சரை கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜு …

அவர் ஒரு பச்சோந்தி.. பல கட்சி தாவியவர் …திமுக குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசியவர் … திமுக அமைச்சரை கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜு …

மதுரை;

மன்னர் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கடம்பூர் ராஜு பேசும்போது,

அதிமுக ஆட்சிக்காலத்தில் மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது.

திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக திமுக அரசினர் நடத்தவில்லை. திமுக அமைச்சர் பெருமக்கள் அரசு விழாவிற்கு கலந்து கொள்ளவில்லை.

கலைஞரின் பேனா சிலை விவகாரத்தில் சீமான் போன்ற அரசியல் பிரமுகர்கள் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்கள். கலைஞர் பேனா சிலை விவகாரத்தில் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.அரசு இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார் .

 தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு,

செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார்.அதிமுகவில் இருந்த போது நன்றாக கூவினார். அவர் பல கட்சிக்கு சென்று வந்தவர் அவருக்கு அடையாளம் கொடுத்தவர் ஜெயலலிதா. திமுக குடும்பத்தை பற்றி தர குறைவாக பேசியவர் செந்தில் பாலாஜி.

அவர் பேச்சு எல்லாம் ஒரு பொருட்டு அல்ல.அவர் ஒரு பச்சோந்தி. வருகின்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பெருவாரியான வெற்றி பெறும் என்றார் .

Leave a Reply