ரெஜிஸ்டர் ஆபீசிலிருந்து பிரதமர், ஜனாதிபதியின் படங்களை நீக்கிய தமிழக அமைச்சர் மகன் திமுக மாநகர செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்… துரைமுருகன்அறிவிப்பு …

திருவள்ளூர் ;
ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் நாசர் மகன் ஆசிம் ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளராக சன். பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியின் படங்களை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா அகற்றியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம். நாசரின் மகன் ஆசிம் ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகரச் செயலாளராக உள்ளார். ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சி கவுன்சிலராகவும் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்களை அகற்றும் அகம்பாவம், ஆணவம், திமிர் எங்கிருந்து வந்தது? இந்த குண்டர்களை தமிழக காவல்துறை உடனே கைது செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.