உதயநிதியும் , சபரீசனும் ஓராண்டில் ரூ.30,000 கோடியைக் குவித்துள்ளனர்… தமிழக அமைச்சர் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ ….

உதயநிதியும் , சபரீசனும்  ஓராண்டில் ரூ.30,000 கோடியைக் குவித்துள்ளனர்… தமிழக அமைச்சர் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ  ….

சென்னை: 

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த 14ஆம் தேதி, திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை DMK Files என்ற பெயரில் வெளியிட்டார்.

 திமுக அமைச்சர்கள் ஊழல் செய்து அதிகளவு சொத்து சேர்த்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக பிரமுகர்களின் சொத்துகள் குறித்து பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசியது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 அதில், “உதயநிதியும் சபரீசனும் ஒரே வருடத்தில் அதிகளவு பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்னையாகி வருகிறது. அந்த பணம் சிறுக சிறுக குவித்தது. தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்” என்று பழனிவேல் தியாகராஜன் கூறுவதுபோல இருக்கிறது.

இந்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுபோன்ற ஆதாரங்கள் தாங்கள் வெளியிட்ட திமுக சொத்துப்பட்டியலில் உள்ள கூற்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply