பூண்டுக்குழம்பு செய்யலாம் வாங்க… செய்முறையை பார்க்கலாம்!!

தேவையான பொருட்கள்:
உரித்த பூண்டு – 1 கப்
குழம்பு மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் – ¾ கப்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
கடுகு – ¼ டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
மிளகு – ¼ டீஸ்பூன்
சீரகம் – ¼ டீஸ்பூன்
அரைக்க:
பூண்டு – 4 பற்கள்
மிளகு – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
செய்முறை:
- புளி தண்ணீரில் குழம்பு மிளகாய்த்தூளைப் போட்டு கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
- அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், மிளகு, சீரகத்தை ஒன்றன் பின்பு ஒன்றாகப் போட்டு தாளிக்கவும்.
- பிறகு உரித்த பூண்டுகளைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.
- அடுத்து அதில் தயாரித்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
- கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
- இப்போது ‘சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு’ தயார்.
- இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.