மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சித்ரா பவுர்ணமிவழிபாடு!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சித்ரா பவுர்ணமிவழிபாடு!!

மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிர தோஷம், பவுர்ணமி, அமாவாசையையொட்டி 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடந்த 3-ந்தேதி முதல் நாளை (6-ந்தேதி) வரை அனுமதி வழங்கப்பட்டன.

இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பறை மலைப்பாதை வழியாக மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக பக்தர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப் பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்தவுடன் தாணிப்பறை அடிவார பகுதிக்கு வந்து விட வேண்டும் எனவும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இரவில் மலைப்பகுதிகளில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply