பார்ட் 1 க்கே என்மீது ரூ.1461 கோடிக்கு கேஸ் போட்டிருக்காங்க.. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்… விரைவில் பார்ட் 2 வரும்.. அண்ணாமலை பேச்சு …

பார்ட் 1 க்கே என்மீது ரூ.1461 கோடிக்கு  கேஸ் போட்டிருக்காங்க.. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்… விரைவில் பார்ட் 2 வரும்.. அண்ணாமலை பேச்சு …

சென்னை:

தனக்கு எதிராக தொடுக்கப்பட்டு உள்ள வழக்குகள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில்;,

எனக்கு எதிராக திமுகவினர் பலரும் வழக்கு தொடுத்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கூட எனக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். முதல்வரை சேலஞ்ச் செய்கிறேன். நீங்களும் குற்றம் செய்துள்ளீர்கள். பிடிஆர் இதைத்தான் சொல்கிறார். அரசு துறையை பயன்படுத்தி என்று ..

பிடிஆர் டேப்பை ரிலீஸ் செய்ததற்காக நீங்கள் என் மீது மீண்டும் இன்னொரு வழக்கு போடுங்கள்.

பிடிஆர் டேப் 1 மணி நேரம் இருக்கிறது. நீங்கள் பிடிஆர் பைல்ஸ் பற்றி கேஸ் போடுங்கள். அது எல்லாம் கோர்ட்டில் வெளியே வரட்டும். இங்கே பிடிஆர் தவறு செய்யவில்லை. தப்பு செய்தவரை பற்றி பேசி இருக்கிறார். அதை பற்றி கோர்ட் பேச வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், எம்பி டி ஆர் பாலு, கனிமொழி, முன்னாள் எம்பி ஆர்எஸ் பாரதி என்று வரிசையாக எனக்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளனர். அவர்கள் மாறி மாறி வழக்கு தொடுத்து உள்ளனர்.

பல கோர்ட்டுகளில் அவர்கள் எனக்கு எதிராக அவதூறு வழக்கு போட்டுள்ளனர். 1461 கோடி ரூபாய்க்கு என் மீது வழக்கு போட்டுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இப்படி நடந்ததே இல்லை.

 இந்திய வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை. அவர்கள் பாஜக எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள்.,மேலும் பாஜக இங்கொன்று அங்கொன்றும் இருப்பதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கிண்டலாக சொன்னார். இப்போது அவர்கள் போட்டு இருக்கும் அவதூறு வழக்குகளை பாருங்கள். பாஜக அங்கேதான் இருக்கும். இதுதான் பாஜகவின் வலிமையை காட்டுகிறது.

நீங்கள் 1461 கோடி ரூபாய்க்கு வழக்கு போடும் அளவிற்கு நாங்கள் முன்னேறி உள்ளோம் என்று காட்டுகிறது. திமுக பைல்ஸ் பார்ட் 2 ஜூலை மாதம் வரும்.

நீங்கள் அவதூறு வழக்கு போடுவதால் நாங்கள் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இந்த முறை புதிய அமைச்சர்கள் மீது புகார்கள் வைக்கப்படும்.

விரைவில் பார்ட் 2 வரப்போகிறது. அப்போது பல உண்மைகள் வரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Leave a Reply