இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி..

இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி..

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். ஒவ்வொரு மாதமும் இந்தக் கோயிலில் பிரதோ‌ஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி அந்த நாட்களில் மட்டுமே பக்தர்களும் மலையேறவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அந்தவகையில், பிரதோஷம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று (வியாழன் கிழமை) முதல் ஜூன் 4ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலை இந்த கோவிலுக்கு மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது என்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் எனவும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்படும் எனவும் வனத்துறை அறிவித்துள்ளது. அத்துடன் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply