பிரதமர் நரேந்திர மோடி, கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை நாளை தொடங்கி வைக்கிறார்!!

பிரதமர் நரேந்திர மோடி, கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை நாளை தொடங்கி வைக்கிறார்!!

நாளை கோவாவின் முதல் வந்தே பாரத்விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இது நாட்டின் 19வது வந்தே பாரத் ரயிலாகும்.

பிரதமர் நரேந்திர மோடி, கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை ஜூன் 3-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் மட்கான் ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

‘மேக் இன் இந்தியா’ மற்றும் தற்சார்பு இந்தியா என்ற பிரதமரின் தொலை நோக்குப் பார்வையை உணர்ந்து, அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில், மும்பை – கோவா வழித்தடத்தில் இணைப்பை மேம்படுத்தி, அப்பகுதி மக்களுக்கு வேகத்துடனும், வசதியுடனும் பயணிக்க வழிவகை செய்யும். இந்த ரயில் நாட்டில் இயக்கப்படும் 19-வது வந்தே பாரத் ரயிலாகும்.

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் கோவாவின் மட்கான் ரயில் நிலையம் இடையே இந்த ரயில் இயக்கப்படும். இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இது ஏறக்குறைய ஏழரை மணி நேரத்தில் பயண தூரத்தை அடையும். இந்த ரயில் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில், உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இரு மாநிலங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்தும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Leave a Reply