கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி ?

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

கொள்ளு – அரை கப்

உளுந்தம் பருப்பு – கால் கப்

கடலை பருப்பு – ஒரு கைப்பிடி

காய்ந்த மிளகாய் – 5

பூண்டு – 10 பல்

மிளகு – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – தேவைக்கு

செய்முறை:

கறிவேப்பிலையை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் ஆறவைத்து கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும்.

அடுத்து உளுந்து, கடலைப்பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

மிளகையும் கருகாமல் வறுத்து கொள்ளவும்.

கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.

கடைசியாக சூடான கடாயில் பூண்டை போட்டு வைத்தால் போதும்.

அனைத்தும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

இப்போது சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி.

இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

Leave a Reply