திருமணம் நடைபெறும்போது வரதட்சணை கேட்டதால்  மணமகனை மரத்தில் கட்டி வைத்த மணமகள் வீட்டார்… பரபரப்பு…

திருமணம் நடைபெறும்போது வரதட்சணை கேட்டதால்  மணமகனை மரத்தில் கட்டி வைத்த மணமகள் வீட்டார்… பரபரப்பு…

பிரதாப்கர்;

உத்தரப்பிரதேசம் பிரதாப்கரில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமர்ஜித் வர்மா என்பவருக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது.

திருமண விழாவில் மாலை மாற்றிக்கொள்ளும் ஜெய் மாலா என்ற சடங்கின்போது, அமர்ஜித்தின் நண்பர்கள் ஏடாகூடமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், மணமகன்-மணமகளின் குடும்பத்தினருக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது மணமகன் அமர்ஜித் வர்மா, திடீரென மணமகளின் குடும்பத்தினரிடம் வரதட்சணைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் இரு வீட்டாரும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், தங்களிடம் வரதட்சணைக் கேட்ட மணமகனைச் சிறைப்பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த மந்தடா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மணமகனை விடுவித்து அவரைக் கைதுசெய்தனர்.

 இது குறித்து போலீசார் கூறும் போது இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை சமரசம் ஏற்படவில்லை” என தெரிவித்தனர்.


Leave a Reply