ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய பாகிஸ்தான்!!

துபாய்:
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்தன.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
அதில், பாகிஸ்தான் அணி மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திற்கு சரிந்தது.
அந்த அணி உலக கோப்பை தொடருக்கு முன் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேற இந்தியா வுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்ற வேண்டும்.
இந்திய அணி தற்போது தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது.
வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றினால் உலக கோப்பை தொடரில் இந்திய அணி நம்பர் 1 அணியாக வலம் வரும்.