உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: நெதர்லாந்து – இங்கிலாந்து நாளை மோதல்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: நெதர்லாந்து – இங்கிலாந்து நாளை மோதல்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புனேவில் நாளை நடக்கும் 40-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 7 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும்.

நெதர்லாந்து 7 ஆட்டத்தில் 2 வெற்றி, 5 தோல்வி பெற்று உள்ளது. அந்த அணி மீதம் உள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் 8 புள்ளிகள் பெறும். ஆனாலும் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது.

2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு, தற்போதைய உலக கோப்பையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதிபெறும். எனவே முதல் 8 இடங்களுக்குள் செல்ல இரு அணிகளும் வெற்றிக்காக போராடும்.

Leave a Reply