அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைப்பு!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
அனால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க செந்தில்பாலாஜி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் எம்ஆர்ஐ அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.