ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுதினம் (நவம்பர் 23) முதல் நடைபெற இருக்கிறது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்:-
- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2. ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்), 3. இஷான் கிஷன், 4. ஜெய்ஸ்வால், 5. திலக் வர்மா, 6. ரிங்கி சிங், 7. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 8. வாஷிங்டன் சுந்தர், 9. அக்சார் பட்டேல், 10. ஷிவம் டுபே, 11. ரவி பிஷ்னோய், 12. அர்ஷ்தீப்சிங், 13. பிரசித் கிருஷ்ணா, 14. அவேஷ் கான், 15. முகேஷ் குமார்.
ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.