எடப்பாடியை பற்றிய கேள்விக்கு…. இனிமேல் பார்க்கத்தானே போறீங்க… சஸ்பன்ஸ் வைத்த சசிகலா ….
திருவாரூர் ;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைந்திருக்கும் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகத்திற்கு சசிகலாவும் அவரது சகோதரர் திவாகரனும் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்கள் சசிகலா பேசிய போது,
ஓபிஎஸ் வந்தால் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச் செயலாளர் பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் நான் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் உங்களிடம் தொடர்பில் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு , பொருத்திருந்து பாருங்கள் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்று இன்று அதிமுக தலைமை அலுவலகம் தடபுடலாக சென்றிருப்பது குறித்த கேள்விக்கு, இனிமேல் பார்க்கத்தானே போறீங்க என்று சஸ்பென்ஸ் வைத்தார்.