நேபாள பெரு​வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்​துள்​ளது; சுமார் 3,000-க்​கும் மேற்பட் டோரை காண​வில்​லை!!

காத்மாண்டு:
நேபாள பெரு​வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்​துள்​ளது. சுமார் 3,000-க்​கும் மேற்பட்டோரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்படுத்​தப்​பட்டு உள்​ளது.

கடந்த 26-ம் தேதி இமயமலை​யில் பனிமலைகள் உடைந்து நேபாள நதி​களில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன் காரண​மாக அந்த நாட்​டின் ரசு​வா, தாதிங், நுவாகோட், கோர்க்​கா, டானாஹன், நவல்​பூர், பராசி, சிட்​வான் ஆகிய 8 மாவட்​டங்​கள் மிக கடுமையாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளன. நேபாளம் – சீனா இடையிலான பிர​தான நெடுஞ்​சாலை வெள்​ளத்​தில் அடித்துச்செல்லப்​பட்​டது.

ஐந்​தாவது நாளாக நேபாளத்​தில் நேற்று மீட்​புப் பணி​கள் நடைபெற்​றன. அந்த நாட்​டின் நீர் மின் திட்​டங்​களில் பணியாற்றிய 898 தொழிலா​ளர்​களை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது.

இதற்​காக இந்​திய நிபுணர் குழு நேற்று முன்​தினம் நேபாளம் சென்​றது. அங்கு திரிசூலி 3ஏ நீர்​மின் திட்​டப் பகு​தி​யின் சுரங்​கத்​தில் சுமார் 400-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் சிக்கி உள்​ளனர்.

சுரங்​கம் முழு​வதை​யும் சகதி மூடி​யிருப்​ப​தால் மீட்​புப் பணி​யில் பெரும் சிரமம் ஏற்​பட்​டிருக்​கிறது.

நேபாளம் சென்ற இந்​தி​யக் குழுவினர் நேற்று முதல் கட்​ட​மாக 6 அங்​குலம் அளவுக்கு சுரங்கத்தில் துளை​யிட்டு ஆக்​சிஜன் செல்ல வழியை ஏற்​படுத்தி உள்​ளனர்.

மேலும் ஒரு நபர் நுழை​யும் அளவுக்கு சுரங்​கத்​தின் பக்க​வாட்​டில் 4 இடங்​களில் துளை​யிட பணி​கள் தொடங்​கப்​பட்டு உள்​ளன.

இதன்​மூலம் சுரங்​கத்​துக்​குள் சென்று தொழிலாளர்களை மீட்க முடி​யும் என்று இந்​திய நிபுணர்​கள் நம்​பிக்கை தெரிவித்துள்ளனர்.

வெள்​ளம் பாதித்த பகு​தி​களில் இருந்து இது​வரை 810 உடல்​கள் மீட்​கப்​பட்டு உள்​ளன.

மிக அதி​கபட்​ச​மாக சிட்​வான் மாவட்​டத்​தில் 248 உடல்​கள் மீட்​கப்​பட்​டிருக்​கிறது. கட்​டிட இடி​பாடு​களில் சிக்​கிய நூற்​றுக்​கணக்​கானோர் காயமடைந்து உள்​ளனர்.

அவர்​கள் காத்மாண்டு உட்பட பல்​வேறு நகரங்​களின் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெறுகின்​றனர்.

ஆயிரக்​கணக்​கானோர் நிவாரண முகாம்​களில் தஞ்​சமடைந்து உள்​ளனர். மேலும் வெள்​ளம் பாதித்த பகு​தி​களில் ஹெலி​காப்​டர், ட்ரோன்​கள் மூலம் உணவு பொட்டங்கள், குடிநீர் பாட்​டில்​கள் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

நீர் மின் நிலைய திட்ட தொழிலா​ளர்​கள் உட்பட சுமார் 3,000-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை.

அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. இந்​தி​யா​வின் சார்​பில் தடவியல் மற்​றும் மரபணு ஆராய்ச்சி நிபுணர்​கள் நேபாளத்​துக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளனர்.

அடை​யாளம் தெரி​யாத நபர்​களின் உடல்​களை அவர்கள் மரபணு சோதனை செய்து உறவினர்​களிடம் ஒப்​படைக்க உதவி செய்​வார்​கள் என்று இந்​தி​ய வெளி​யுறவுத்​ துறை தெரிவித்துள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *