தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் தங்கம், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!!
சென்னை:தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில் ரொக்கப் பணம் மட்டும் ரூ.543 கோடி…
வேலைக்காகவெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, விமானங்கள் மூலம் தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்!!
சென்னை:வேலைக்காகவெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, விமானங்கள் மூலம் தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கிடையில், வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகவும், தனித்தனியாகவும்…
234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும் – உதயநிதி திட்டவட்டம்!!
சென்னை:தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த ஜனநாயகப் போரில், 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார். தமிழகத்தில் நாளை…
விசில் அடிப்பவர்களைத் திரையரங்குகளுக்கு அனுப்புங்கள்; சினிமா மோகத்தில் மயங்கு பவர்கள் சிறுத்தைகள் அல்ல – திருமாவளவன் பேச்சு!!
சென்னை:“விசில் அடிப்பவர்களைத் திரையரங்குகளுக்கு அனுப்புங்கள். சினிமா மோகத்தில் மயங்குபவர்கள் சிறுத்தைகள் அல்ல” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதி குமராட்சி பகுதியில் விசிக வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக…
ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!!
வாஷிங்டன்:கடந்த 19-ல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை நேற்று கைப்பற்றியது. இந்த எண்ணெய் கப்பல் 330 மீட்டர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவிப்பு!!
வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள…
ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்!!
புதுடெல்லி:ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதன் எதிரொலியாக ஈரான் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த…
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் – ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை!!
டெஹ்ரான்:ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்டினென்ட் கர்னல் இப்ராகிம் ஸோல்பகாரி டெஹ்ரானில் நேற்று கூறியதாவது: எங்கள் எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை…