”மீண்டும் அதிமுகவில் இணைந்த மைத்ரேயன்”!!

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்https://cdn.adgebra.net/images/webp/287_1307_34322/TB10333_300x250.webpசெவிதிறன் கருவிகள் விலை அதிகம் என மக்கள் கருதினர், இதை காணும் வரை. படிக்க

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியாரை சந்தித்து இணைந்து கொண்டார். மீண்டும் இணைத்து கொள்ளுமாறு அளித்த கடிதத்தை பரிசீலனை செய்த அதிமுக தலைமை மைத்ரேயன் சேர்த்துக்கொண்டது.

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (12.9.2024 வியாழக் கிழமை), நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.

அதனை, கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பரிசீலனை செய்து, டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொண்டார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *