இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்க உதவும் கருப்பு கவுனி அரிசி!!

பாரம்பரிய அரிசி ரகம் கருப்பு கவுனி அரிசி இன்று அரிதாகிவிட்டது. இது கருப்பாக இருப்பதற்கு காரணம், இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான்.
கருப்பு கவுனி அரிசி சமைத்த பின் ஊதா நிறத்தில் இருக்கும். பண்டைய தமிழ் மன்னர்கள் – சீன மன்னர்கள் இடையே இருந்த கப்பல் போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வியாபாரம் காரணமாக கருப்பு கவுனி தமிழகம் வந்தடைந்தது.

சீன அரசர்கள் தங்களின் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கருப்பு கவுனியில் செய்யப்பட்ட விருந்து அளிக்கப்பட்டது.

இதன் காரணம் இதில் உள்ள ஊட்ட சத்துக்கள். சீன அரசர்கள் இந்த வகை அரிசி கடவுள் தங்களுக்கு அளித்தாக கருதினார்கள். இதனால் பொதுமக்கள் இவ்வகை அரிசியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது.


அரசரின் கட்டளை மீறி, பொதுமக்கள் யாரேனும் “கருப்பு கவுனி” அரிசியை பயன்படுத்தினால் தண்டனைக்கு உட்படுத்தபட்டனர்.

தமிழகத்தின் தொடு வர்மம் கலை, ஒரு சில மாற்றம் கொண்டு சீனாவில் வேறு அறியப்படுகிறது. இவ்வகை மருத்துவர்கள் கருப்பு கவுனியின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தார்கள்.

இவர்களின், கூற்றுப்படி பிரபஞ்ச சக்தியை உள்ள வாங்கும் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கருப்புகவுணி அரிசிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது.
இதில் அதிகளவில் உள்ள நார்ச்சத்து உள்ளது.

கருப்பு கவுனி அரிசியின் அந்தோசினனின் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இருதய நோய்களைத் தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை மேம்பட உதவுகிறது.


சிவப்பு அரிசி உள்ளிட்ட மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்பு கவுனி அரிசி அந்தோசினனின் பாதிப்பினை தடுக்கிறது. மேலும், இதய பாதிப்பினை தடுக்கிறது.


கருப்பு கவுனி அரிசி புற்றுநோய்க்கு எதிரானது என்பதை சீனாவில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில் நிரூபித்துள்ளனர்.

கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளதால் உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைகிறது என்பதை ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.


உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *