2025-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை​களுடன் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் – தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை:
அடுத்த 2025-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை​களுடன் 24 நாட்கள் அரசு விடு​முறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்​துள்ளது.

ஆண்டு​தோறும், தமிழக அரசின் சார்​பில் சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமைகள் அரசு விடு​முறை நாட்கள் தவிர, இதர பொது விடு​முறை தினங்கள் அறிவிக்​கப்​படும்.

அந்த வகையில், அடுத்த 2025-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, செலாவணி முறிச்​சட்​டத்​தின் அடிப்​படை​யில், தமிழக அரசின் கட்டுப்​பாட்​டின் கீழ் உள்ள அனைத்து அலுவல​கங்​களும் 2025-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமை​களும் மூடப்பட வேண்​டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடு​முறை நாட்​களின் விவரங்களும் அறிவிக்​கப்​பட்டுள்ளன.

இதில், ஏப்ரல் 1-ம் தேதி திங்கள் கிழமை விடு​முறை என்பது வணிக மற்றும் கூட்டுறவு வங்கி​களுக்கு மட்டுமே பொருந்​தும். இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்​துறை நிறு​வனங்​கள், கழகங்​கள், வாரி​யங்கள் முதலிய​வற்றுக்கும் பொருந்​தும்.

விடு​முறையை பொறுத்​தவரை, இந்த ஆண்டில் நவம்பர் மாதத்​தில் பொதுவான சனி, ஞாயிறு விடு​முறை நாட்​களைத் தவிர வேறு அரசு விடு​முறை என்பது இல்லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *