இரண்டாவது நாளாக சிவகங்கையில் கள ஆய்வு மேற்கொள்கிறார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

சிவகங்கை :
சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

திமுக ஆட்சியில் தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி திமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார்.

கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். நேற்று சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் கள ஆய்வில் ஈடுபடுகிறார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல் பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஆய்வு செய்யும் முதலமைச்சர் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *