தேர்​தலுக்​கான அதிரடி ஆக்‌ஷன் பிளானுக்கு தயாராகும் ஸ்டாலின்!!

சென்னை:

“வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர்.

தகுதியானவர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டியது உங்கள் (மாவட்டச் செயலாளர்கள்) கடமை” அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் தேர்தலுக்கான தனது ஆக் ஷன் பிளானை இப்படி அறிவித்தார்.

அ​தி​முக – பாஜக கூட்​ட​ணி, தவெக-​வின் எழுச்சி இவற்​றோடு அமலாக்​கத்​துறை, நீதி​மன்ற நடவடிக்​கைள் மற்​றும் சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினை​களால் ஆளுங்​கட்​சிக்கு பெரும் நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது. அந்த நெருக்​கடிகளை சமாளித்து தேர்​தலில் வென்று ஆட்​சி​யைத் தக்​கவைக்க ஆயத்​த​மாகி வரு​கிறது திமுக தலை​மை.

தேர்​தலுக்​கான ஸ்டா​லினின் ஆக் ஷன் பிளான் குறித்து பேசிய தலை​மைக் கழக நிர்​வாகி​கள் சிலர், “உளவுத்​துறை கொடுக்​கும் சர்​வே​யும் சபரீசனின் ‘பென் டீம்’ தரும் சர்வே ரிப்​போர்ட்​டும் உடனுக்​குடன் ஸ்டா​லினின் தனிப்​பட்ட பார்​வைக்கு கொண்டு செல்​லப்​படு​கின்​றன. இதை கிராஸ் செக் செய்​வதற்​காக சில தனி​யார் ஏஜென்​சிகள் மூல​மும் சர்வே எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, கோவை​யில் தொடங்கி கிருஷ்ணகிரி வரையி​லான கொங்கு மண்​டலத்​தில் உள்ள 64 தொகு​தி​களில், 2021 தேர்​தலில், அதி​முக – பாஜக கூட்​டணி 42 தொகு​தி​களை வென்​றது.

22 தொகு​தி​களில் மட்​டுமே திமுக கூட்​டணி வென்​றது. கொங்கு மண்​டலத்​தில் கடந்த முறை கைவிட்​டுப் போன 42 தொகு​தி​களில் பெரு​வாரி​யான தொகு​தி​களை இம்​முறை திமுக கைப்​பற்ற வேண்​டும் என நினைக்​கி​றார் ஸ்டா​லின்.

அதேபோல், வட தமிழகத்தில் உள்ள 65 தொகுதிகளில் கடந்த முறை 55 தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது.

ஆனாலும் பல தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் இந்த வெற்றி சாத்தியமானது. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, 20 தொகுதிகளில் கடும் போட்டி வரலாம் என சர்வே சொல்கிறது. திமுக-வுக்கு பலவீனமாக உள்ள தொகுதிகளில் தனித்த செல்வாக்கு கொண்டவர்களை வேட்பாளர்களை நிறுத்தி கடுமையாக வேலை செய்தால் தான் அந்தத் தொகுதிகளை வென்றெடுக்க முடியும் எனவும் சர்வே கணித்திருக்கிறது.

மாநிலம் முழு​வதும் முதல்​வரின் செயல்​பாடு​களுக்கு மக்​கள் மத்​தி​யில் ஆதரவு இருந்​தா​லும் அமைச்​சர்​கள், எம்​எல்​ஏ-க்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள், உள்​ளாட்சி பிர​தி​ நி​தி​களின் செயல்​பாட்​டில் பல இடங்​களில் அதிருப்தி இருக்​கிறது.

இது தேர்​தலில் எதிரொலிக்​கலாம் என்​றும் சர்வே டீம் சொல்​லி​யிருப்​ப​தாக தெரி​கிறது.

இதையெல்​லாம் மனதில் வைத்​துத்​தான் கட்​சிக்​குள்​ளும் சீர்​திருத்த நடவடிக்​கை​களை மேற்​கொள்ள தயா​ராகி வரு​கி​றார் ஸ்டா​லின். அவரது இந்த நடவடிக்​கை​யில், செயல்​ப​டாத நிர்​வாகி​களும், அதிருப்​திக்கு ஆளாகி இருப்​பவர்​களும் ஓரங்​கட்​டப்​படு​வார்​கள்.

மாவட்​டச் செய​லா​ளர்​களின் சிபாரிசுப்​படி தேர்​தலில் சீட் கொடுத்து வந்த முறையை​யும் இம்​முறை மாற்​றப் போகி​றார் ஸ்டா​லின். அதை​யும் மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் வெளிப்​படை​யாகவே சொல்​லிவிட்​டார்.

அதேசம​யம், தொகு​திக்கு 3 பேர் கொண்ட பட்​டியலை தயா​ரிக்​கும் பொறுப்​பை​யும் ‘பென் டீம்’ பொறுப்​பில் விட்​டிருப்​ப​தாகத் தெரி​கிறது. தகு​தி​யான வேட்​பாளர்​கள் என்ற அளவு​கோல் எடுக்​கப்​பட்​டிருப்​ப​தால் சிட்​டிங் எம்​எல்​ஏ-க்​களில் பாதிப் பேருக்கு மேல் மீண்​டும் சீட் கிடைக்க வாய்ப்​பில்​லை.

சாதிய பின்​னணி, பணபலம், நற்​பெயர், தொகு​தி​யில் தனித்த செல்​வாக்கு உள்​ளிட்ட தகு​தி​களு​டன் இம்​முறை வேட்​பாளர்​களைத் தேடு​கிறது திமுக. இதனால், கட்சி சாராத, கட்​சி​யில் முக்​கிய பதவி​யில் இல்​லாதவர்​களுக்​கும் கூட இம்​முறை வாய்ப்​புக் கிடைக்​கலாம்” என்​ற​னர்.

ஆட்​சியை தக்க வைக்க முதல்​வர் ஸ்டா​லினின் 2.0 இலக்கை நோக்​கிய இந்த அதிரடி ஆக்‌ஷன் பிளான் கட்​சிக்​குள் எத்​தகைய தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று தெரியவில்​லை!

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *