தமிழக மக்​கள் ஆட்சி மாற்​றத்​துக்கு தயா​ராகி​விட்​டார்​கள் – ஜி.கே.வாசன் நம்பிக்கை!!

தஞ்சாவூர்:
தமாகா நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் தஞ்சாவூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.​வாசன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருப்​புவனம் அஜித்​கு​மார் உயி​ரிழப்​பில் பெரும் மர்​மம் இருக்​கிறது.

இதில் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி யார்? முழு​மை​யான விசா​ரணை மூலம் இந்த மர்​மங்​களுக்கு விடை​காண வேண்​டும்.மக்​களுக்கு கொடுத்த வாக்​குறு​தி​களை திமுக அரசு நிறைவேற்​ற​வில்​லை. ஆசிரியர்​கள், தொழிலா​ளர்​கள் உள்​ளிட்​டோர் தொடர்ந்து போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றனர்.

அதி​முக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் பாஜக, தமாகா மற்​றும் ஒரு​மித்த கருத்​துடைய கட்​சிகள்​தான் உள்​ளன. பழனி​சாமி கூட்​ட​ணித் தலை​வ​ராக இருக்​கிறார். இதை அமித்ஷா உறு​திபடுத்​தி​யுள்​ளார்.

தமிழக மக்​கள் ஆட்சி மாற்​றத்​துக்கு தயா​ராகி​விட்​டார்​கள். அரசின் மீதான அதிருப்​தியை வெளிப்​படை​யாக பேசத் தொடங்​கி​விட்​டனர். எனவே, எங்​கள் கூட்​டணி நிச்​ச​யம் வெற்றி பெறும்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கோவை​யில் இன்று பிரச்​சா​ரப் பயணத்தை தொடங்​கு​கிறார். அவர் செல்​லும் இடங்​களில் எல்​லாம் தமாகா நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் வரவேற்பு அளிப்​பார்​கள். பழனி​சாமி​யின் மக்​கள் சந்​திப்பு சுற்​றுப்​பயணம், ஆட்சி மாற்​றத்​துக்​கான அடித்​தள​மாக அமை​யும்.

காவிரி கடைமடை வரை தண்​ணீர் சென்று சேராத​தால், பல இடங்​களில் பயிர்​கள் கருகி வரு​கின்​றன. எனவே, கடைமடை வரை தண்​ணீர் செல்​வதை அரசு உறு​திப்​படுத்த வேண்​டும். வேளாண் கூட்​டுறவு சங்​கங்​களில் விவ​சா​யிகளுக்கு நிபந்​தனை​யின்றி பயிர்க் கடன் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *