உ.பி.​யில் தொடர்ச்​சி​யாக நீண்ட காலம் முதல்​வ​ராக பதவி வகித்​தவர்​கள் பட்​டியலில் யோகி ஆதித்​ய​நாத் முதலிடம் !!

புதுடெல்லி:
உ.பி.​யில் தொடர்ச்​சி​யாக நீண்ட காலம் முதல்​வ​ராக பதவி வகித்​தவர்​கள் பட்​டியலில் யோகி ஆதித்​ய​நாத் முதலிடம் பிடித்​துள்​ளார். உத்தர பிரதேசத்​தில் கடந்த 2017-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக வெற்றி பெற்​று, அக்கட்சியின் யோகி ஆதித்​ய​நாத் முதல்​வ​ரா​னார்.

இதையடுத்து கடந்த 2022-ல் நடை​பெற்ற பேர​வைத் தேர்​தலிலும் 2-வது முறை​யாக வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமை பாஜக​வுக்கு கிடைத்​தது. இது​போல, யோகி ஆதித்​ய​நாத் 2-வது முறை​யாக முதல்​வ​ரா​னார்.

இந்​நிலை​யில், யோகி ஆதித்​ய​நாத் முதல்​வ​ராக பொறுப்​பேற்று நேற்​றுடன் 8 ஆண்​டு​கள் மற்​றும் 130 நாட்​களை நிறைவு செய்​தார். இதன் மூலம் அம்​மாநிலத்​தில் தொடர்ச்​சி​யாக நீண்ட காலம் முதல்​வ​ராக பதவி வகித்​தவர்​கள் பட்​டியலில் யோகி ஆதித்​ய​நாத் முதலிடம் பிடித்​துள்​ளார்.

இதற்கு முன்பு இந்த சாதனைக்கு சொந்​தக்​கார​ராக இருந்​தவர் கோவிந்த் வல்​லப் பந்த். உத்தர பிரதேசத்​தின் (சுதந்​திரத்​துக்கு பிறகு) முதல் முதலமைச்​ச​ரான அவர், 8 ஆண்​டு​கள் 127 நாட்​கள் தொடர்ந்து முதல்​வ​ராக பதவி வகித்​துள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *