மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதி​கரிக்​கப்பு!!

மேட்டூர் / தருமபுரி:
மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 16,288 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 15,040 கனஅடி​யாக குறைந்​தது.

அணையி​லிருந்து டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடியி​லிருந்து 10,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. அணை நீர்​மட்​டம் நேற்று 119.02 அடி​யாக​வும், நீர் இருப்பு 91.91 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி​யாக பதி​வான நீ்ர​வரத்து மாலை​யில் 16 ஆயிரம் கனஅடி​யாகக் குறைந்​தது. மேலும், நேற்று காலை 14 ஆயிரம் கனஅடி​யாக​வும், பகல் ஒரு மணி​யள​வில் 12 ஆயிரம் கனஅடி​யாக​வும்​ நீர்​வரத்​து குறைந்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *