உயர்கல்வித் துறை சார்​பில் ரூ.59.93 கோடி​யில் கட்​டப்​பட்ட கல்​வி​சார் கட்​டிடங்​களை திறந்​து​ வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்!!

சென்னை:
உயர்கல்வித் துறை சார்​பில் ரூ.59.93 கோடி​யில் கட்​டப்​பட்ட கல்​வி​சார் கட்​டிடங்​களை திறந்​து​ வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், உதவி பேராசிரியர்​கள், உதவி நூல​கர்​கள் உட்பட 213 பேருக்கு பணி நியமன ஆணை​களை வழங்​கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: உயர்​கல்​வித் துறை உட்​கட்​டமைப்​பு​களை மேம்​படுத்​தும் வகை​யில் கடலூர், வடலூர் அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி, விழுப்​புரம் மாவட்​டம், செஞ்சி கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி, திருப்​பத்​தூர் மாவட்​டம், நாட்​றாம்​பள்ளி அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி, அரியலூர் மாவட்​டம், ஜெயங்​கொண்​டம் அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி, மயி​லாடு​துறை மாவட்​டம், மணல்​மேடு அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களுக்கு ரூ.59.93 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடங்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார்.

புரிந்​துணர்வு ஒப்​பந்​தம்: தமிழகத்​தில் உள்ள 44 அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களை உலகத் தரமான தொழிற்​துறை 4.0 தரங்​களுக்கு ஏற்ப திறன்​மிகு மையங்​களாக ரூ.2,590.30 கோடி செல​வில் மேம்​படுத்த டாடா டெக்​னாலஜிஸ் நிறு​வனம், தமிழக அரசின் தொழில்​நுட்ப கல்வி ஆணை​யரகம் இடையே முதல்​வர் ஸ்டா​லின் முன்​னிலை​யில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

மேலும், அண்ணா பல்​கலைக்​கழக‌ உறுப்பு கல்​லூரி​களில் 190 உதவிப் பேராசிரியர்​கள், 12 உதவி நூல​கர்​கள் மற்​றும் 11 உதவி இயக்​குநர் (உடற்​‌கல்​வி) பணி​யிடங்​களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மாக தேர்வு நடத்​தப்​பட்​டு, பின்​னர் அண்ணா பல்​கலைக்​கழகத்​தால் நேர்​முகத்​தேர்வு நடத்​தப்​பட்​டு, இப்​பணி​யிடங்​களுக்கு தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார்.

இந்​நிகழ்​வில், அமைச்​சர் கோவி.செழியன், தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம், உயர்​கல்​விச் செயலர் பொ.சங்​கர், கல்​லூரி கல்வி ஆணை​ எ.சுந்​தர​வல்​லி, தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ. இன்னெசன்ட் திவ்​யா, அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் பதி​வாளர் வெ.குமரேசன், டாடா டெக்​னாலஜிஸ் நிறுவன செயல் துணைத் தலை​வர் சைலேஷ் சரப், உலகளா​விய தலை​வர் சுஷில் குமார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *