சென்னை
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் விவகாரத்தில் மதவெறி அரசியல் நடத்தப்படுவதாக கூறி மதுரையில் கடந்த 22ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய திருமாவளவன், சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது. பாஜக பிள்ளைகள் என்பது அம்லமாகிவிட்டது’ என்றார்.
இந்நிலையில், திருமாவளவனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் கூறுகையில், விஜயையும், என்னையும் பாஜக பெற்றெடுக்கும்போது பக்கத்தில் இருந்து பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்’ என்றார்.