ஜன​நாயகத்​தை​யும் தேசிய முன்​னேற்​றத்​தை​யும் நிலைநிறுத்​து​வ​தில் வலு​வான கல்வி நிறு​வனங்​களின் முக்​கியப் பங்கு உள்​ளது – விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி பேச்சு!!

காட்டங்கொளத்தூர்:
பெரிய அளவில் கனவு கண்​டு, விடா​முயற்​சி​யுடன் செயல்​பட்​டு, ‘வளர்ந்த இந்​தி​யா’ என்ற இலக்கை அடைவதற்​கு, மாணவர்​கள் அர்ப்​பணிப்​புடன் பங்​களிக்க வேண்​டும் என்று எஸ்​.ஆர்​.எம். பல்​கலை. விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரி​வித்​துள்​ளார்.

எஸ்​.ஆர்​.எம். அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப கல்வி நிறு​வனத்​தில் இந்​தி​யக் குடியரசின் 75 ஆண்​டு​கள் வரலாற்​றைப் போற்​றும் வகை​யில், ‘இந்​திய குடியரசு – 75 ஆண்​டு​கள்’ என்ற கருத்​தரங்​கு, வேந்​தர் அருங்​காட்​சி​யகம் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது.

இந்​நிகழ்ச்​சிக்கு எஸ்ஆர்எம் பல்கலை. நிறு​வனர் மற்​றும் வேந்​தர் டி. ஆர். பாரிவேந்​தர் தலைமை தாங்​கி​னார். ஆளுநர் ஆர்​.என்​.ரவி சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்று ‘வேந்​தர் அருங்​காட்​சி​யகத்தை திறந்து வைத்​தார்.

இதில் இந்​திய அரசி​ய லமைப்​பின் பரிணா​மம், கோட்​பாடு​கள் மற்​றும் ஜனநாயக அமைப்​பு​கள் குறித்த அரிய காட்​சிப்​பொருட்​களும், ஆவணங்​களும் இடம்​பெற்​றுள்​ளன.

பின்​னர் கருத்​தரங்​கில் தமிழக ஆளுநர் ஆர்​.என்​. ரவி பேசி​யது: இளைஞர்கள் ஒவ்​வொரு​வரும் நாட்​டின் விலைம​திப்​பில்லா சொத்​து.

லட்​சி​யத்​துடன் ஒழுக்​கத்​தை​யும் இணைத்​து, பெரிய அளவில் கனவு கண்​டு, விடா​முயற்​சி​யுடன் செயல்​பட்டு ‘விக்​சித் பாரத்’ (வளர்ந்த இந்​தி​யா) என்ற இலக்கை அடைவதற்கு அர்ப்​பணிப்​புடன் பங்​களிக்க வேண்​டும் என்​றார்.

வேந்​தர் டி. ஆர். பாரிவேந்​தர் பேசும்​போது, “ஜன​நாயகத்​தை​யும் தேசிய முன்​னேற்​றத்​தை​யும் நிலைநிறுத்​து​வ​தில் வலு​வான கல்வி நிறு​வனங்​களின் முக்​கியப் பங்கு உள்​ளது.

கல்வி என்பது, ஒற்​றுமை, தேசிய உணர்வு, பொறுப்​புணர்வை வலுப்​படுத்​து​வ​தாக இருக்க வேண்​டும் என்பதே எமது குறிக்​கோள்.

உயர்​கல்வி நிறு​வனங்​கள், தேசத்​தின் மீது அர்ப்​பணிப்​புள்ள குடிமக்​களை​ உரு​வாக்​கு​வ​தில் முக்​கிய பங்​காற்​றுகின்​றன” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *