குண்டு எறிதலில் 16 மீட்டர் தூரத்துக்கு மேல் எறிந்த முதல் இந்திய வீராங்கனை கிருஷ்ணாவுக்கு தங்கம்!!

சென்னை:

அமெரிக்காவின் அல்புகெர்க்கி நகரில், நியூ மெக்சிகோ அணி ஓபன் உள்ளரங்க தடகள போட்டி 2 நாட்கள் நடந்தது. இதில் யு.என்.எல்.வி. அணிக்காக பங்கேற்ற தமிழக வீராங்கனை கிருஷ்ணா குண்டு எறிதலில் 16.63 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். 23 வயதான கிருஷ்ணா உள்ளரங்க குண்டு எறிதலில் 16 மீட்டர் தூரத்துக்கு மேல் எறிந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்குரியவர்.

இவர், இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் ஜெயசங்கர் மேனன்- பிரசன்னா தம்பதியின் மகள் ஆவார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *