கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் !!

கேரளா;
கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்.

கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி குழந்தை அலின் உடன் தாய், தாத்தா, பாட்டி ஆகியோர் கோட்டயத்திலிருந்து திருவல்லாவுக்கு காரில் செல்லும் வழியில் எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

காரில் இருந்த ஷெரினின் தாய், தாத்தா மற்றும் பாட்டி காயமடைந்தனர். படுகாயமடைந்த குழந்தை ஷெரின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி குழந்தை மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான தங்கள் மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.

மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர்.

கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.

சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன.

இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை மறைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்க்கு கிடைத்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *