ரியாத்:
சவுதி அரேபியாவின் அல்கார்ஜ் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
அந்த விமானப் படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் பல்வேறு ஏவுகணைகளை வீசியது.
இதில் ஓர் ஏவுகணை, இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் இந்தியர்கள் உயிரிழக்கவில்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.