கூவாகம் கூத்​தாண்​ட​வர் கோயில் சித்​திரை திரு​விழா தேரோட்​டம் – அரவான் களப்பலி காண திருநங்கைகள் வழிபாடு!!

விழுப்புரம்:
கூவாகம் கூத்​தாண்​ட​வர் கோயில் சித்​திரை திரு​விழா தேரோட்​டம் நேற்று வெகு விமரிசை​யாக நடை​பெற்​றது. அரவான் களப்​பலி கொடுக்​கப்​பட்​டதும், தாலியை அறுத்து விதவை கோலத்​தில் திருநங்​கைகள் ஒப்​பாரி வைத்து அழுதனர்.

உளுந்​தூர்​பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்​தில் உள்ள கூத்​தாண்​ட​வர் கோயி​லில், சித்​திரை திரு​விழா நடை​பெறுகிறது. விழா​வின் முக்​கிய நிகழ்​வாக அரவானின் திருக்​கண் திறத்​தல் மற்​றும் திருநங்​கைகள் மாங்​கல்​யம் ஏற்​றுக் கொள்​ளும் நிகழ்வு நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இதைத்​தொடர்ந்து கோயி​லில் உள்ள அரவான் சிரசுக்கு நேற்று அதிகாலை, மாலை அணி​வித்​து, ஊர்​வலமாக கொண்டு வரப்பட்​டு, கோயிலின் வடக்கே நிலைநிறுத்​தப்​பட்​டிருந்த சகடை​யில் சுமார் 30 அடி உயரகம்​பம் நட்​டு, வைக்கோல் சுற்​றப்​பட்​டது.

பின்​னர், 3 கிராமங்​களில் இருந்து கொண்டு வரப்​பட்ட புஜங்​கள், மார்பு பதக்​கம், அரசிலை, பாதம், கைகள், கயிறு, கடை​யாணி உள்​ளிட்​ட​வற்றை கொண்டு அரவானின் உரு​வம் அ​மைக்​கப்​பட்டது.

இதையடுத்து தேரோட்​டம் தொடங்​கியது திருநங்கைகள், பக்​தர்​கள் திருத்​தேரை வடம்பிடித்து இழுத்​தனர் கோயிலை சுற்றி 4 மாட வீதி​களில் வலம் வந்து நிலையை வந்​தடைந்​தது.

பின்னர் நத்​தம் கிராமம் பந்​தலடி எனப்​படும் அழிகளத்​துக்கு திருத்​தேர் சென்​றது. அங்கு அரவான் களப்​பலி கொடுக்​கும் நிகழ்வு நடை​பெற்​றது.

இதையடுத்து திருநங்​கைகள் தாலியை அறுத்து, வெள்ளை சேலையை உடுத்தி ஒப்​பாரி வைத்தனர்.

பின்​னர், அரவான் உயிர்ப்​பிக்​கும் நிகழ்​வு நடை​பெற்​றது. அதன்பிறகு, சிரசு சிறப்பு அலங்காரத்​துடன் கோயில் கொண்டு வரப்​பட்டது. தரு​மர்​ பட்​டாபிஷேகத்​துடன்​ விழா நாளை நிறைவுபெறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *