இந்​திய கிரிக்​கெட் அணியின் முன்​னாள் வீரர் யுவராஜ் சிங்​கிடம் பெற்ற பயிற்​சியே எனது ஆட்​டத்தை மேம்​படுத்​தி​யது – அபிஷேக் சர்மா!!

புதுடெல்லி:
இந்​திய கிரிக்​கெட் அணியின் முன்​னாள் வீரர் யுவராஜ் சிங்​கிடம் பெற்ற பயிற்​சியே எனது ஆட்​டத்தை மேம்​படுத்​தி​யது என்று இந்​திய கிரிக்​கெட் அணி வீரரும், சன்​ரைசர்ஸ் ஹைதரா​பாத் அணி​யின் அதிரடி வீரரு​மான அபிஷேக் சர்மா தெரி​வித்​தார்.

ஜியோஸ்​டார் சேனலுக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: கரோனா காலத்​தில் யுவ​ராஜ் சிங்​குடன் இணைந்து பயிற்சி மேற்​கொண்​டது எனக்கு ஒரு மிகப்​பெரிய தருண​மாக அமைந்​தது.

நான் சிறு​வயது முதலே அவரை ஒரு முன்​மா​திரி​யாகக் கருதி விளை​யாடி வந்தேன். அவரே எனது ஆதர்ச நாயக​ராகத் திகழ்ந்​தார்.

ஆரம்ப கால​கட்​டத்​தில் அவர் எனக்​குச் சில வழிகாட்டுதல்களை வழங்​கி​னார் என்​றாலும், நாங்​கள் ஒன்​றாகச் செல​விடப் போதிய நேரம் அமைய​வில்​லை. அதன் பிறகு பொது ஊரடங்கு காலம் வந்​து​விட்​டது.

அந்​தச் சூழலை, குறிப்​பிட்ட சில வீரர்​களு​டன் மிக நெருக்கமாகப் பணி​யாற்​று​வதற்​கான ஒரு வாய்ப்​பாக கருதினேன்.

இதைத் தொடர்ந்து யுவ​ராஜ் சிங்​குடன் பயிற்சி பெற்று பேட்​டிங் நுணுக்​கங்​களை கற்​றுக் கொண்டேன்.

யுவ​ராஜ் சிங்​கால்​தான் எனது கிரிக்​கெட் ஆட்​டம் மேம்​பட்​டது. அவரிடம் பெற்ற அனுபவத்​தால் தேசிய அணிக்​காக அதிக அழுத்​த​முள்ள போட்​டிகளில் சிறப்​பாகச் செயல்​படு​வதற்கு மிக​வும் உதவியது.

மேலும் அழுத்​தம் அதி​க​மாக உள்ள போட்​டிகளில் கவனம் செலுத்தி வெற்றி பெறு​வதற்​கான ஒரு வலு​வான மனநிலையை வளர்த்​துக்​கொள்​ள​வும் உதவியது.

எங்​கள் பயிற்சி முகாம் தொடங்​கிய​போது, என் நம்​பிக்​கை​யையே அடியோடு மாற்​றியமைத்த ஒரு விஷ​யத்தை யுவ​ராஜ் சிங் என்​னிடம் தெரி​வித்​தார்.

இப்​போது பயிற்சி பெறு​வது சில உள்​ளூர் போட்டிகளுக்கோ அல்​லது ஐபிஎல் போட்​டிகளுக்கோ அல்ல என்​றும், இது​போன்ற பயிற்சி இந்​திய அணிக்​காகப் பெரும் வெற்​றிகளை ஈட்​டித் தர உதவும் என்று யுவ​ராஜ் சிங் அறி​வுறுத்​தி​னார்.

சர்​வ​தேச கிரிக்​கெட் ஆட்​டங்​களில் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் வகையி​லான ஆட்​டங்​களை வெளிப்​படுத்​த​வும், மிக முக்​கிய​மான தருணங்​களில் பந்​து​வீச்​சின் மூலம் வெற்​றியைத் தேடித்​தர​வும் என்னை அவர் மனரீ​தி​யாகத் தயார்​படுத்​திக் கொண்​டிருப்​ப​தா​கவும் யுவராஜ் சிங் தெரி​வித்​தார்.

கரோனா காலத்​தில் யுவ​ராஜ் சிங் கொடுத்த பயிற்​சியை என்​னால் மறக்​கவே முடி​யாது. நான் இந்த அளவுக்கு கிரிக்கெட்​டில் முன்​னேறி​யிருப்​ப​தற்கு காரணம் அவர்தான்.

என்​னுடைய தந்தை ராஜ்கு​மார் சர்​மா, பஞ்​சாப் அணிக்​காக ரஞ்சி போட்​டிகளில் விளை​யாடி​யுள்​ளார்.

அவர் கிரிக்​கெட் பயிற்​சி​யாள​ரும்​ கூட. சிறு​வய​திலிருந்​தே அவரைப்​ ​பார்​த்​து வளர்​ந்​தேன்​. அப்​படியே கிரிக்​கெட்​டும்​ பழகிக்​ கொண்​டேன்​. இவ்வாறு அவர்​ தெரி​வித்​​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *