அமெரிக்க தூதர் செர்ஜியோ உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேச்சு!!

புதுடெல்லி:
இந்தியாவுக்கான அமெ ரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்​திப்​பின்​போது தீவிர​வாத எதிர்ப்​பு, போதைப்​பொருள் தடுப்பு மற்​றும் எல்​லைப் பாது​காப்பு குறித்து இரு​வரும் ஆலோ​சனை நடத்​தினர்.

இதுகுறித்து அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவுடன் ஒரு சிறப்​பான சந்​திப்பு அமைந்​தது.

தீவிர​வாதத்தை எதிர்த்​துப் போராடு​வது, போதைப் பொருட்​களில் இருந்து நம் மக்​களைப் பாது​காப்​பது, நமது எல்​லைகளைப் பாது​காப்​பது, இரு நாடுகளிலும் உள்ள குற்​ற​வாளி​களை சட்​டத்​தின் முன் நிறுத்​து​வது ஆகிய​வற்​றில் ஒத்​துழைப்பை மேம்​படுத்​து​வது குறித்து நாங்​கள் ஒரு பயனுள்ள விவாதம் மேற்​கொண்​டோம்’’ என்று தெரிவித்துள்ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *