சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மருத்துவர் பாலாஜி!!

கத்திக்குத்தால் காயமடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், கத்திக்குத்தால் காயமடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி பாலாஜியை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *