”சூர்யா 45-ன்” படப்பிடிப்பு இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களுடன் ஓடி கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார். நடிகர் சூர்யாவின் 45-வது படம் தொடர்பான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.

சூர்யாவின் 45-வது திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஆர்.ஜே.வாக இருந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சூர்யா 45′ பட அறிவிப்பு தொடர்பான முதல் போஸ்டரும் வெளியாகியது.

இந்த நிலையில் சூர்யா 45-ன் படப்பிடிப்பு இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.

இதில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாசாணியம்மன் கோவிலில் சூர்யா மனமுருக வழிபட்டார்.

முதற்கட்ட படப்பிடிப்பை 35 நாட்கள் கோவையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்.ஜே.பாலாஜி காம்போ ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *