மேட்டூர் அணை நீர்மட்டம் 111.39 அடி உயர்ந்தது!!

மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதனிடையே பெஞ்சல் புயல் காரணமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5,195 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,414 கன அடியாக அதிகரித்தது.

மேலும் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9,246 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. காலை 8 மணியளவில் நீர்மட்டம் 111.39 அடி உயர்ந்தது. நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.யாக உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *